ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பழம்பெரும் நடிகை ஜெயந்தி(73), உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருவர் உள்ளம், அன்னை இல்லம், படகோட்டி, கர்ணன், எதிர் நீச்சல், நீர்க்குமிழி, இரு கோடுகள், பாமா விஜயம், நில் கவனி காதலி உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர் ஜெயந்தி. அன்றைய எம்ஜிஆர்., சிவாஜி, ஜெமினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர், கன்னட மொழியிலும் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய மொழிகளில் மட்டும் 500 படங்களில் நடித்துள்ளார்.
பெங்களூரில் வசித்து வரும் ஜெயந்திக்கு இன்று காலை திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆஸ்துமா நோய் இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.