ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினிமா ஸ்டிரைக் தொடர்ந்து வரும் நிலையில் நேற்று தயாரிப்பாளர் சங்கத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ் திரைப்பட துறையில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒவ்வொரு நாளும் திரைதுறை சார்ந்த சங்கங்களுடன் சினிமா துறையின் நலன் குறித்தும் அதன் வளர்ச்சி குறித்தும் பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து விவாதித்து அதை செய்வதற்கான முடிவுகளை தயாரிப்பாளர்கள் சங்கம் மற்ற சங்கங்களுடன் சேர்ந்து எடுத்து வருகின்றது. அந்த வரிசையில் தயாரிப்பாளர்கள் சங்கம் நடிகர் சங்கத்துடன் திரைத்துறையின் நலனுக்காக பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட கோரிக்கைகள் குறித்து ஆலோசித்தது.
அதன் அடிப்படையில் நடிகர்களுடைய உதவியாளர்களுக்கு தயாரிப்பாளர்கள் பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தை மட்டும் வழங்குவதென்றும் அதற்குமேல் நடிகர்கள் தங்களுடைய சொந்த செலவிலே சம்பளம் வழங்க வேண்டும். அவர்களுக்கு தயாரிப்பாளர்கள் ஊதியம் வழங்கவேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டது .
அதற்கு முதலாவதாக முன்வந்து நடிகர் சூர்யா அவருடைய உதவியாளர்களுக்கு அவரே முழு ஊதியமும் வழங்குவதாக தெரிவித்துள்ளார். அவரை தொடந்து நடிகர் விஷால்,கார்த்தி இருவரும் தாங்களும் தங்களது உதவியாளர்கள் சம்பளத்தை தாங்களே வழங்குவதாக தெரிவித்துள்ளார்கள். மற்ற நடிகர் நடிகைகளும், இதுபோன்று முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதன்மூலம் தயாரிப்பாளர்களுக்கு 15 லட்சத்தில் இருந்து 20 லட்சம் வரை தயாரிப்பு செலவு குறையும் என்பது குறிப்பிட்டதக்கது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.