மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 |
முதல் படம் இயக்கும்போது திடீர் மரணம் அடைந்தவர் கொல்லுப்புடி ஸ்ரீநிவாஸ். அவரது நினைவாக ஆண்டு தோறும் சிறந்த அறிமுக இயக்குனர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறார்கள். அந்த வரிசையில் இந்த ஆண்டு 21வது விருதினை பெறுகிறார். அறிமுக இயக்குனர் கொங்கணா சென் சர்மா.
மேற்கு வங்களாத்தை சேர்ந்த கொங்கணா சென் சர்மா, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி ஏராளமான ஹிந்தி மற்றும் பெங்காலி படங்களில் நடித்தவர். மிஸ்டர் அண்ட் மிசஸ் அய்யர், ஓம்காரா படங்களுக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர்.
நங்கூரம் என்ற பெங்காலி குறும்படத்தை இயக்கிய கொங்கணா, அதன் பிறகு ஏ டெத் இன் தி குன்ஞ் என்ற திரைப்படத்தை இயக்கி அதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார்.
இந்தப் படத்திற்குத்தான் கொல்லுப்புடி ஸ்ரீநிவாஸ் விருது வழங்கப்படுகிறது. இது கூச்ச சுபாவம் கொண்ட ஒரு மாணவனின் கதை. இந்தியா முழுவதிலிருமிருந்து 23 படங்கள் பரிசீலிக்கப்பட்டு இந்தப் படம் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் 12ந் தேதி விருது வழங்கும் விழா நடக்கிறது.