600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களின் அமோகமான வரவேற்பு, வெற்றிக்குப் பிறகு சரித்திரப் படங்களை எடுத்தால் மக்கள் வரவேற்பு கொடுப்பார்கள் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் வெளிவந்த 'பத்மாவத்' படமும் நல்ல வசூலைப் பெற்றது. சர்ச்சைகள் எழாமல் இருந்தால் அந்தப் படம் இன்னும் அதிகமான வசூலைப் பெற்றிருக்கலாம் என்கிறார்கள்.
இதனிடையே, இந்தியாவின் பெரும் தொழிலதிபரான முகேஷ் அம்பானி, அமீர்கானுடன் இணைந்து 'மகாபாரதா' படத்தைத் தயாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக 1000 கோடி ரூபாய் முதலீடு செய்ய அவர் தயாராக இருக்கிறாராம். நீண்ட நாட்களாகவே மகாபாரதக் கதையில் நடிக்க வேண்டும் என்பது தனது ஆவல் என அமீர்கான் சொல்லி வருகிறார்.
அமீர்கான் நடித்த 'தங்கல்' படம் சீன வசூலில் சாதனை புரிந்ததால் அவருடைய பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் அதிகரித்துள்ளது. 'தங்கல்' படம் இதுவரை 1900 கோடி வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள். அதனால், அமீர்கான் 'மகாபாரதா' படத்தை 1000 கோடியில் தயாரித்தால் 3000 கோடி வரை வசூல் அள்ளலாம் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.