பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
நடிகை விவகாரத்தில் சிறை சென்று திரும்பியபின் முழு மூச்சாக தனது 'கம்மர சம்பவம்' படத்தில் நடித்து வருகிறார் திலீப். இந்தப்படத்தில் 9௦ வயது கிழவர் உட்பட மூன்று வேடங்களில் நடிக்கிறார் திலீப். இதில் இந்த கிழவர் வேடத்திற்கான மேக்கப்பிற்கு மட்டும் தினசரி 5 மணி நேரம் செலவானதாம்.
அதேப்போல இன்னொரு வேடத்தில் நன்கு அடர்த்தியாக வளர்ந்த தாடியுடன் பல காட்சிகளில் நடிக்கவேண்டி இருந்ததாம். தாடி இல்லாமல் இருக்கும் காட்சிகளை படமாக்கி முடித்த சமயத்தில் தான் வழக்கில் சிக்கி கைதாகி சிறை சென்றார் திலீப்..
கிட்டத்தட்ட எண்பது நாட்கள் சிறைவாசத்தில், திலீப்பின் தாடி அடர்த்தியாக வளர்ந்து இருந்தது, இந்தப்படத்தில் அவரது கேரக்டருக்கு ரொம்பவே உதவியாக மாறிவிட்டது. சிறையிலிருந்து வெளியான பின்னரும் திலீப் நீண்ட நாட்களாக தாடியை எடுக்காமல் வலம் வந்ததற்கு காரணம் 'கம்மர சம்பவம்' படமும் அவரது கேரக்டரும் தானாம்.