தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வாசல், ராஜஸ்தான், சார்லி சாப்ளின், புதுக்கோட்டையிலிருந்து சரவணன், தேவதையை கண்டேன், கிழக்கு கடற்கரைசாலை உள்பட தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் எடிட்டராக பணியாற்றிவர் அனில் மல்நாட். காமெடி படங்களுக்கு பிரபலமானவர். சித்தாரா என்ற தெலுங்கு படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார்.
66 வயதாகும் அனில் மல்நாட், முதுமை காரணமாக சினிமாவிலிருந்து விலகி சென்னை குரோம்பேட்டையில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அனில் மல்நாட்க்கு நேற்று முன்தினம் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினார்கள்.