சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
சஞ்சாய் லீலா பன்சாலி தயாரித்த பிரமாண்ட படம் பத்மாவத். தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இந்த படம் வெளியாவதற்கு முன்பு ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்தது. அதனால் பல மாதங்களாக வெளியாக முடியாமல் தடுமாறி வந்த பத்மாவத் படம் பின்னர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்ததை அடுத்து ஜனவரி 25-ந்தேதி வெளியானது.
ஆனபோதும் இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, போன்ற மாநிலங்களில் இப்படம் வெளியாகவில்லை. அதேசமயம், வெளிநாடுகளில் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடப்பட்டது.
அந்த வகையில், நேற்று முன்தினம் பத்மாவத் படம் வசூல்ரீதியாக ரூ.300 கோடியை கிராஸ் பண்ணிவிட்டது. 50 நாட்கள் இந்த வசூலை அடைந்துள்ளது.
ஹிந்தியில் இதற்கு முன்னர் பிகே, பஜ்ரங்கி பைஜான், சுல்தான், தங்கல், டைகர் ஜிந்தா ஹே போன்ற நேரடி ஹிந்தி படங்களுடன் பாகுபலி 2(ஹிந்தி டப்பிங்) படமும் ரூ.300 கோடி கிளப்பில் இணைந்துள்ளன.