அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சஞ்சாய் லீலா பன்சாலி தயாரித்த பிரமாண்ட படம் பத்மாவத். தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இந்த படம் வெளியாவதற்கு முன்பு ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்தது. அதனால் பல மாதங்களாக வெளியாக முடியாமல் தடுமாறி வந்த பத்மாவத் படம் பின்னர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்ததை அடுத்து ஜனவரி 25-ந்தேதி வெளியானது.
ஆனபோதும் இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, போன்ற மாநிலங்களில் இப்படம் வெளியாகவில்லை. அதேசமயம், வெளிநாடுகளில் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடப்பட்டது.
அந்த வகையில், நேற்று முன்தினம் பத்மாவத் படம் வசூல்ரீதியாக ரூ.300 கோடியை கிராஸ் பண்ணிவிட்டது. 50 நாட்கள் இந்த வசூலை அடைந்துள்ளது.
ஹிந்தியில் இதற்கு முன்னர் பிகே, பஜ்ரங்கி பைஜான், சுல்தான், தங்கல், டைகர் ஜிந்தா ஹே போன்ற நேரடி ஹிந்தி படங்களுடன் பாகுபலி 2(ஹிந்தி டப்பிங்) படமும் ரூ.300 கோடி கிளப்பில் இணைந்துள்ளன.