ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி |
கடும் எதிர்ப்புக்கு இடையில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் பத்மாவத். இந்தப்படத்தில் தீபிகா படுகோனே சித்தூர் ராணி பத்மாவதி கேரக்டரில் நடித்திருந்தார். அப்போது அவர் அணிந்து நடித்த நகைகள், உடைகள் வடநாட்டு மக்களை பெரிதும் கவர்ந்தது.
குறிப்பாக ராஜஸ்தான் பெண்கள் அதனை பெரிதும் விரும்பினார்கள். படப்பிடிப்பில் தீபிகா படுகோனே 35 கிலோ எடை வரையிலான நகை, புடவைகள் அணிந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது வடநாட்டு நகை கடைகளில் பத்மாவதி கலெக்ஷன் என்ற தனி பிரிவை தொடங்கியிருக்கிறார்கள். தீபிகா படுகோனே நடித்த காட்சிகளை புகைப்படங்களாக வைத்து அதில் அவர் அணிந்திருந்த நகைகளை அருகில் காட்சிப்படுத்தி விற்பனை செய்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் பேன்சி நகை கடைகள், கவரிங் நகை கடைகளிலும் பத்மாவதி நகைகள் விற்கப்படுகிறது. மக்களின் ஆர்வத்தை கண்டு நகை வியாபாரிகளும் பத்மாவதி நகை தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
"படத்தின் வசூலை விட பத்மாவதி நகை வியாபாரம் அதிக அளவில் நடக்கும்" என்று வடநாட்டு நகை வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள். பத்மாவதியின் நகைகளுக்கு தென்னிந்தியாவில் வரவேற்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.