இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
தமிழ்த் திரையுலகத்தில் இன்று முதல் முழுமையான வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பித்துள்ளது. இத்தனை நாட்களாக புதிய படங்களை வெளியிடுவதை மட்டுமே தயாரிப்பாளர்கள் நிறுத்தினார்கள். அதைத் தாங்க முடியாமலே பல தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டன.
இந்நிலையில் கேளிக்கை வரி ரத்து, சீட் குறைப்பு அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தியேட்டர்கள் உரிமையாளர்கள் மார்ச் 16-ம் தேதி வரை கெடு விதித்தனர். இதற்கு அரசு எந்த பதிலும் சொல்லவில்லை. இதனால் ஏற்கனவே அறிவித்தபடி இன்று(மார்ச் 16) முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன.
சென்னை விலக்கு
சென்னையில் உள்ள தியேட்டர்களும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்க போவதில்லை என ஏற்கனவே அறிவித்துவிட்டன. இதனால் சென்னையில் மட்டும் ஏற்கனவே வெளியான படங்கள், பிறமொழி படங்களை கொண்டு தியேட்டர்கள் இயங்கி வருகின்றன.