'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பெருவாரியான இளவட்ட ரசிகர்களை கவர்ந்துள்ள சாய் பல்லவி, எந்த அளவுக்கு வேகமாக வளர்ந்தாரோ அதேப்போன்று சமீபகாலமாக கிசுகிசுக்களிலும் சிக்கிக் கொண்டு வருகிறார். குறிப்பாக, அவர் படப்பிடிப்பு தளங்களில் ஹீரோக்களை மதிப்பதில்லை. உடன் நடிக்கும் நடிகைகளிடம் சரியாக பேச்சுவார்த்தையே வைத்துக் கொள்வதில்லை என்று அவரைப் பற்றி சரமாரியாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
இந்தநேரத்தில், தற்போது அவரை ஆந்திர பிரதேச மாநில அமைச்சர் கன்டா ஸ்ரீனிவாச ராவ்வின் மகனும் நடிகருமான ரவிதேஜாவுடன் இணைத்து டோலிவுட்டில் கிசுகிசுக்கள் பரவிக்கொண்டிருக்கிறது. இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு செம கோபத்தில் இருக்கிறார் சாய் பல்லவி.
இத்தனைக்கும் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படம் கூட நடிக்கவில்லை. இந்த வதந்திக்கு அமைச்சர் கன்டா ஸ்ரீனிவாசராவ்வும் மறுப்பு தெரிவித்துள்ளதோடு, இதுபோன்ற செய்திகள், தன் மகனின் வாழ்க்கையை பாதிக்கும் என்றும், இதுபோன்ற வதந்திகளை தவிர்க்கும்படியும் கேட்டு கொண்டுள்ளார்.