ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகையில், சினிமாவில் இருக்கும் பிரபலங்களும் பாலியல் தொல்லை மற்றும் சீண்டல்களுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகைகள் அமலாபால், சனுஷா போன்றவர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானார்கள்.
இந்நிலையில், பிரபல பின்னணி பாடகியான சின்மயி, தானும் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். அவர் தன் டுவிட்டர் பதிவில், பொது நிகழ்ச்சி ஒன்றில் பாலியல் சீண்டலுக்கு உள்ளானேன். இதை நான் இன்ஸ்டிராகிராமில் பகிர்ந்த போது அதிர்ச்சியாக இருந்தது. பல ஆண்களும், பெண்களும் தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதை பகிர்ந்தார்கள்.
இதில் பெரும்பாலும் குடும்ப உறவுகளாலும், பயணங்களிலும், நெருங்கிய நண்பர்களும் தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது பெரும்பாலும் அதை வெளியில் சொல்ல தயங்குகிறார்கள்.
குறிப்பாக பெண்கள் தங்கள் பெற்றோர்களிடம் சொல்ல பயப்படுகிறார்கள். இதனால் படிப்பதையோ, வேலைக்கு போவதையோ நிறுத்தி விடுவார்களோ என அஞ்சுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.
இவ்வாறு சின்மயி கூறியுள்ளார்.