'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜூலியும் நான்கு பேரும் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆலியா மானசா. அந்தப்படம் வெற்றி பெறாததால் அடுத்தபடியாக அவருக்கு படங்கள் கிடைக்கவில்லை. அதனால் சிலமாத முயற்சிக்குப் பிறகு விஜய் டிவியில் தயாராக இருந்த ராஜா ராணி சீரியலில் நடிக்க அழைப்பு வர அதில் செம்பா என்ற கேரக்டரில் நடிக்கத் தொடங்கினார்.
பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் ஆலியா மானசா நடித்த அந்த வேடம் இப்போது அவரை பெரிய அளவில் பேச வைத்துள்ளது. இந்த நேரத்தில் அவருக்கு சினிமாவில் இருந்தும் சில வாய்ப்புகள் வருகிறதாம். ஆனால், அந்த வாய்ப்புகளை ஏற்றுக் கொள்ளாத ஆலியா மானசா, ஜூலியும் 4 பேரும் படத்திற்கு பிறகு சினிமாவில் சான்ஸ் கேட்டு சென்ற இடங்களில் எல்லாம் உயரத்தை குறிப்பிட்டு வாய்ப்பு தர மறுத்தார்கள், அதனால் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை குறைந்து விட்டது.
அதேசமயம், சின்னத்திரை என்னை கொண்டாடுகிறது. சின்னத்திரையாக இருந்தாலும் என்னைப்பொறுத்தவரை ரொம்ப பெரிய திரையாகவே கருதுகிறேன். தொடர்ந்து சின்னத்திரையில் நீடிக்க ஆசைப்படுகிறேன் என்கிறார் ஆலியா மானசா.