ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி |
அஜித்தின் தீவிரமான ரசிகராக இருந்து வருபவர் சிம்பு. அவரின் படம் ரிலீஸாகும் போது முதல்நாள், முதல் ஷோவை எப்படியாவது பார்த்து விடக்கூடியவர். வாலு படம் வெளியாவதில் பிரச்னை எழுந்தபோது, சிம்புவுக்கு உதவ முன் வந்தார் விஜய். மேலும் அஜித் பற்றி தன் டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவிட அதுவே அவருக்கு வம்பான நிகழ்வும் நடந்தது.
இந்த நிலையில், சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் சிம்பு. அப்போது அவர் பேசும்போது, நான் எப்போதுமே மனசுல பட்டதை வெளிப்படையாக தைரியமாக பேசுவேன். அதற்கு காரணம் அஜித் தான். அவரிடமிருந்து தான் இதை கற்றுக்கொண்டேன் என்றார்.
ரஜினி, விஜய்யும் என்னைக்கவர்ந்த நடிகர்கள். அவர்களை எனது முன்னோடிகளாக கருதுகிறேன். இருவருமே கடினமாக உழைத்து முன்னுக்கு வந்தவர்கள். அதோடு, நான் கஷ்டப்படும்போது எனக்கு உதவி செய்த தமிழரான விஜய்யின் தம்பியாக இருப்பதில் எப்போதுமே நான் பெருமைப்படுகிறேன் என்றார் சிம்பு.