தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபத்தில் பெண்கள் தின சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சுகன்யாவிடம், நடிப்பிற்கு ஏன் இவ்வளவு இடைவெளி என்று கேட்ட போது அவர் கூறியதாவது.... நான் சிறந்த பரதநாட்டிய கலைஞராக வரவே ஆசைப்பட்டேன். ஆனால், புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் நடிகையாக கால் பதித்தேன். முதல் படத்தில் நான் நெப்போலியன் உட்பட 8 பேர் புதுமுகங்கள்.
அறிமுகமான முதல் படத்திலேயே எனக்கு ஒன்பது விருதுகள். தொடர்ந்து நான் நடித்த சின்னகவுண்டர் போன்ற பல படங்கள் சூப்பர் ஹிட்டாகின. கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு சினிமாவில் பிஸியாக இருந்தேன். அது என் வாழ்வின் பொற்காலமாக உணர்கிறேன்.
இப்போது வாரா வாரம் தமிழ் புதுப்படங்கள் வருவதை பார்த்து கொண்டு இருக்கிறேன். நல்ல கதையுள்ள சில படங்கள் வருகிறது. டெக்னாலஜி அதிகமாகவே வளர்ச்சி அடைந்து உள்ளது. கருத்து சுதந்திரம் எங்கும் பரவி வருகிறது. நான் அதிகமாக பேசி பழகாதவள், ஆனால் நடப்பதை கவனித்து வருகிறேன்.
எல்லாம் நடிகர்கள் அரசியலுக்கு வருவது பெரும் பேச்சாக உள்ளது. இவர்கள் வருகை குறித்து தினம் என்னிடம் கருத்து கேட்கின்றனர். ஆனால் எனக்கு பதில் சொல்வதில் பெரிய உடன்பாடு இல்லை. மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு இருக்கின்றனர்.
நடிப்பில் இப்போது சில படங்கள் வருகிறது. தெலுங்கில் நான் சமீபத்தில் நடித்த படம் எனக்கு நல்ல பேர் கிடைத்துள்ளது. விரைவில் சேரன் படத்தில் நடிக்க உள்ளேன். நிறைய படங்கள் என்பதை விட நல்ல நல்ல படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன். மக்கள் என்னை அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டார்கள், நானும் அவ்வளவு சீக்கிரம் மக்களை மறந்து கடந்து போக முடியாது.
இவ்வாறு சுகன்யா பேசினார்.