இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இயக்குனர் ராமின் உதவியாளர் மாரி செல்வராஜ், இயக்கி உள்ள படம் பரியேறும் பெருமாள். இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்துள்ளார். கதிர், ஆனந்தி நடித்துள்ளனர். படத்தில் இடம்பெறும் கருப்பி என்ற பாடல் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் ராம், "என் மாணவன் இயக்கி உள்ள பரியேறும் பெருமாள் படம், அவன் மனதில் இருந்த வெறி" என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: “பரியேறும் பெருமாள்” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. “தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்” சிறுகதைத் தொகுப்பின் மூலமாக அறிமுகமாகி, முன்னணி வார இதழில் வெளியான மறக்கவே முடியாத தொடர் “மறக்கவே நினைக்கிறேன்” மூலம் தமிழக மக்களை தன் வசப்படுத்திய மாரி செல்வராஜின் முதல் படம்.
இதை என் மாணவனின் முதல் கோபம் என்று கூட சொல்லலாம். அவனுடைய இயலாமை, அவனுடைய ஆற்றாமை, அவனுக்குள்ள இருக்கிற ரௌத்திரம், உன்மத்தம், வெறி, எரிச்சல், வரலாற்றின் மீது இருந்த தீராத கோபம், இது எல்லாவற்றின் மொத்த வெளிப்பாடாக இந்தப் பாட்டும், படமும் இருக்கும். “பரியேறும் பெருமாள்” கதைக்குள்ள இருக்கிற மொத்த உணர்ச்சியும் இந்தப்பாட்டுல இருக்கிறதா நான் நினைக்கிறேன். அந்த உணர்ச்சியில இருந்த கோபத்தையும் உணர்ச்சியையும் சந்தோஷ் நாராயணன், அவர் குரலிலும் இசையிலும் மிகச் சிறப்பாக கொண்டு வந்திருக்கார்.
பா.இரஞ்சித், தமிழ் சினிமாவுக்கு அட்டகத்தி மூலமா அறிமுகமானார். என்னைப் பொறுத்தவரைக்கும் அட்டகத்தி, தமிழ் சினிமாவின் முக்கியமான சினிமாவில் ஒண்ணு. தமிழ் சினிமாவில் அதுவரை பார்க்காத ஒரு திரைமொழியையும், அதுவரை பார்க்காத ஒரு மக்களின் வாழ்வியலையும் கொண்ட ஒரு படம். பா.இரஞ்சித்தின் முதல் தயாரிப்பு இது, அவருக்கும், நீலம் புரொடக்சனுக்கும் என்னுடைய வாழ்த்துகள். சந்தோஷ் நாராயணனுக்கு என்னுடைய வாழ்த்துகள். மாரி செல்வராஜூக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
இவ்வாறு ராம் கூறியிருக்கிறார்.