பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
சென்னை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில், மாவட்ட கட்சி நிர்வாகிகளுக்கு, உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவங்களை நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல் வழங்கினார். பின்னர் கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களின் கேள்விகளுக்கு கமல் பதிலளித்தார்.
அப்போது பேசிய கமல், கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும்; ஏழைகளுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் கல்வி இருக்க வேண்டும். வேலையில்லாமல் அலைவதற்கு ஸ்கூட்டர் எதற்கு? எதிர்க்காலத்தை மாற்ற மாணவர்கள் முன்வர வேண்டும். அரசு அதிகாரிகள், தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.
அமைச்சர்களின் பிள்ளைகள், அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும். மாற்றங்கள் அனைத்தும் நம்மிடம் இருந்தே துவங்க வேண்டும். தவறுகள் எல்லா அரசிலும் நிகழும்; நீங்கள் இல்லாமல் என்னால் எதையும் செய்ய முடியாது.
மக்களுக்கு உதவாத அரசு ஓட்டை படகுபோல் மூழ்கிவிடும். நீங்கள் என்னை தலைவர் என்று அழைக்க வேண்டாம். நான் உங்களை தலைவா என்று அழைக்க வேண்டும். நீங்கள் என்னிடம் இருந்து என்னவெல்லாம் எதிர்பார்க்கிறீர்களோ, அவை அனைத்தையும் நான் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். இவ்வாறு கமல் பேசினார்.