கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
இந்தியாவின் பிரபல நடிகையாக இருக்கும் வித்யா பாலன், கடந்த ஆண்டு ஹிந்தியில் துமாரி சுலு என்ற படத்தில் நடித்தார். அந்த படம் பெரும் வெற்றி பெற்றது. அதையடுத்து, அந்தப் படத்தை தமிழில் எடுத்து வருகின்றனர். துமாரி சுலு படத்தில், வித்யாபாலன் நடித்த வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் கதாபாத்திரத்தில், நடிகர் சூர்யாவின் மனைவி, நடிகை ஜோதிகா நடிக்கிறார். இந்தப்படத்தில் நடிப்பது குறித்து நடிகை ஜோதிகா கூறியிருப்பதாவது:
நான், நடிகை வித்யாபாலன் நடிக்கும் அனைத்துப் படங்களையும் பார்த்து விடுவேன். அவரின் தீவிர ரசிகை நான். அவருடைய குரல் என்னை மட்டுமல்ல, அவரை அறிந்தவர் அனைவரையும் வசீகரித்துள்ளது. எனக்கு அவரது குரல் ரொம்பவே பிடிக்கும். அவர் நடித்த படங்கள் அனைத்தும் பிடித்திருந்தாலும், துமாரி சுலு ரொம்பவும் பிடித்திருந்தது. அவர் நடித்த கேரக்டர் எனக்குக் கிடைத்தால், அதில் நடித்துப் பார்க்க வேண்டும் என ஆவலாக இருந்த போதுதான், துமாரி சுலு படத்தை தமிழில் தயாரிக்கப் போவதாகவும், அதில் வித்யா பாலன் நடித்த கேரக்டரில் நீங்கள் நடிக்க வேண்டும் என்றும் கேட்டு என்னை அணுகினர்.
விடுவேனா... உடனே ஒப்புக் கொண்டு விட்டேன். வித்யாபாலனைப் போல என்னால் நடிக்க முடியாவிட்டாலும், சிறப்பாகவே செய்வேன். படத்தைப் பார்த்து விட்டு, வித்யாபாலன் என்ன சொல்வார் என்பதற்காக காத்திருக்கிறேன். எப்படி இருந்தாலும், இந்தப் படத்தில் வித்யாபாலன் கேரக்டரில் நடித்ததை எனக்கான கவுரமாக எடுத்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.