இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன் இயக்குனர் என்பதையும் தாண்டி தயாரிப்பாளர், நடிகர் என பல அவதாரங்கள் எடுத்திருக்கிறார். எடுத்துக் கொண்ட எந்த பணியையும் முடிக்காமல் மேலும் மேலும் புது படங்களை ஆரம்பித்து அகலகால் வைத்துக் கொண்டிருக்கிறார்.
தனுஷ் நடித்துள்ள என்னை நோக்கி பாயும் தோட்டா, விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் இரண்டையும் கவுதம் மேனன் இயக்குகிறார். இரண்டு படமும் முழுமை அடையாமல் இருக்கிறது. இந்த நிலையில் ஒன்றாக, விண்ணை தாண்டி வருவாயா இரண்டாம் பாகம் என இரண்டு புதிய படங்களை இயக்குவதாக கூறுகிறார். இதற்கான வேலைகள் நடந்து வருகிறது.
தற்போது, துருவங்கள் 16 இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசுரன், செல்வராகவன் இயக்கி உள்ள நெஞ்சம் மறப்பதில்லை படங்களை தயாரித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் ரிலீஸ் எப்போது என்பது தெரியவில்லை.
தற்போது கவுதம் மேனன் கடும் பொருளாதார சிக்கலில் இருப்பதாக சொல்கிறார்கள். இந்த நிலையில் தான் இயக்கும் படத்தையும், தயாரிக்கும் படத்தையும் முடிக்காமல் புதிய படங்கள் அறிவிப்பதிலேயே கவனமாக இருக்கிறார். இப்படி அகலகால் வைப்பது அவரை மேலும் சிக்கலாக்கி விடும். என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான நண்பர்கள்.