டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சிலந்தி படத்தை இயக்கிய ஆதிராஜன் இயக்கும் படம் அருவா சண்ட. பிரபல கபடி சாம்பியன் ராஜா படத்தை தயாரிப்பதோடு, ஹீரோவாகவும் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மாளவிகா மேனன் நடிக்கிறார். இந்தப்படம் வங்கியில் கார் கடன் பெற்று அந்த பணத்தை கொண்டு தயாரிக்கப்படுவது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:
சென்னை வேளச்சேரியில் உள்ள ஸ்டேட் வங்கியில் படத்தின் தயாரிப்பாளர் ராஜா உள்பட 13 பேர் கார் கடன் வாங்க விண்ணப்பம் அளித்துள்ளனர். இதில் 9 பேருக்கு 3.3 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. வங்கியில் பணியாற்றிய சித்ரா என்பவர் கடன் லோன் அனுமதிக்கும் வங்கி பாஸ்வேர்டை திருடி இந்த கடனை அளித்துள்ளார். கார் கடன் வாங்கினால் அதற்கான தொகை கார் டீலருக்கு அனுப்பப்பட வேண்டும் என்கிற விதிமுறையும் மீறப்பட்டு கடனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த முறைகேடு நடந்துள்ளது. தயாரிப்பாளர் ராஜா வங்கி அதிகாரி சித்ராவுடன் இணைந்து திட்டமிட்டு இந்த மோசடியை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. முறைகேட்டை கண்டுபிடித்த வங்கி அதிகாரி கார் லோன் பெற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். நீதிமன்றம் உத்தரவிட்டும் போலீசார் வழக்கு பதியவில்லை. இந்த நிலையில் வங்கி சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் சிவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிமன்றம் அருவா சண்ட படத்தை வெளியிட தடைவிதித்தது.