ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்தும் கூட பெரிய அளவில் புகழ் பெறாமல் போன இசையமைப்பாளர் வித்யாசாகர். 1989ம் ஆண்டு வெளிவந்த 'பூமனம்' தமிழ்ப் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர்.
மலையாளத்தில் ஒரு காலத்தில் நம்பர் 1 இசையமைப்பாளராக விளங்கியவர். தமிழில் ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி', கமல்ஹாசன் நடித்த 'அன்பே சிவம்', விஜய் நடித்த 'கோயமுத்தூர் மாப்பிள்ளை, நிலாவே வா, கில்லி, திருமலை, மதுர, ஆதி, குருவி, காவலன்' உள்ளிட்ட படங்களுக்கும், அஜித் நடித்த 'உயிரோடு உயிராக, வில்லன், ஜி, பரமசிவம்' படங்களுக்கும், விக்ரம் நடித்த 'தில், தூள்' படங்களுக்கும், மேலும் 'ரன், இயற்கை, தென்றல், சுள்ளான், கனா கண்டேன், மொழி, பெரியார், சிறுத்தை,' கடந்த ஆண்டு வெளிவந்த 'திருட்டுப் பயலே' ஆகிய படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
நேற்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு, கிரிக்கெட் வீரர் அஸ்வின் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஆச்சரியப்படுத்தினார். “குறைவாக மதிப்பிடப்பட்ட இசையமைப்பாளரான வித்யாசகருக்கு இன்று பிறந்தநாள். ஏ.ஆர்.ரகுமானின் ஆளுமையால் அவருடைய பல அற்புதமான மெலடி பாடல்கள் மறைக்கப்பட்டுவிட்டன. 'கர்ணா' படத்தில் இடம் பெற்ற 'மலரே மௌனமா' பாடல் எனது தனிப்பட்ட அபிமானப் பாடல், உங்களுக்கு எப்படி?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
அஷ்வினின் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து அவருடைய டுவிட்டர் பதிவில் அவர்களது அபிமானப் பாடல்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.
வித்யாசாகரின் இசையாலும் இனிமையான பாடல்களாலும் பல படங்கள் வெற்றியடைந்ததை அவர் இசையால் வெற்றியடைந்த சில முன்னணி ஹீரோக்களே மறந்து போனது ஆச்சரியம்தான். ஒரு கிரிக்கெட் வீரர் அவரை ரசிகராக நினைவு கூர்ந்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.