டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தியேட்டர்களில் டிஜிட்டல் முறையில் திரைப்படங்களைத் திரையிடும் நிறுவனங்களுக்கும் தென்னிந்தியத் திரையுலகினருக்கும் இடையே கடந்த சில வருடங்களாகவே மோதல் இருந்து வருகிறது. ஒவ்வொரு புதுப்படம் வெளிவரும் போதும் தியேட்டர்களில் படங்களைத் திரையிட அவர்கள் வாங்கும் கட்டணம் அதிகம், அவற்றைக் குறைக்க வேண்டும் என திரையுலகினர் கோரி வந்தார்கள்.
ஆனால், டிஜிட்டல் கம்பெனிகள் அதைக் குறைக்கவேயில்லை. இதனால், கோபமடைந்த திரையுலகினர் தென்னிந்திய அளவில் ஒன்று கூடி டிஜிட்டல் கம்பெனிகளின் கட்டண விகிதத்தைக் குறைத்தே ஆக வேண்டும் என்று பேசினார்கள்.
இருவருக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தைகளில் எந்தவிதமான சுமூக முடிவும் எட்டப்படவில்லை. இதனால், திட்டமிட்டபடி நாளை மார்ச் 1ம் தேதி முதல் புதிய படங்களை வெளியிடப் போவதில்லை என தென்னிந்தியத் திரையுலகினர் முடிவு செய்தனர்.
தெலுங்குத் திரையுலகமும், தமிழ்த் திரையுலகமும் இதில் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால், கன்னட, மலையாள உலகினர் இன்னும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வது குறித்து உறுதி செய்யவில்லை.
இதனிடையே, இன்று மாலை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களுடன் கூட்டம் நடைபெற உள்ளது. அதன் பிறகு இது பற்றிய விரிவான அறிக்கை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.