டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
துபாயில் கடந்த சனிக்கிழமையன்று மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் நேற்றிரவு மும்பை வந்து சேர்ந்தது. இன்று காலை முதல் நண்பகல் வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதையடுத்து இன்று மாலை உடல் தகனம் செய்யப்படுகிறது.
மகாராஷ்டிர மாநில அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய உடல் தற்போது தேசியக் கொடியால் போர்த்தப்பட்டுள்ளது. ஸ்ரீதேவியின் உடலுக்கு காலை முதலே பாலிவுட் பிரபலங்கள் பலரும் இறுதி மரியாதை செலுத்தினர்.
நடிகை ஹேமமாலினி அஞ்சலி செலுத்திய பின் டுவிட்டரில் அது பற்றி பதிவிட்டுள்ளார். “ஸ்ரீதேவிக்கு என்னுடைய இறுதி மரியாதையை செலுத்தினேன். மொத்த திரையுலகினரும் துயரத்தில் இருந்தனர். சிலர் உடைந்து அழுதனர். திரையில் மேஜிக்கை நிகழ்த்தியவர். மரணத்தில் அமைதியும், மொத்தத்தில் சமாதானத்துடனும், அழகான சிகப்பு நிறப் புடவையில் கிடத்தி வைக்கப்பட்டுள்ளார்,” எனக் கூறியுள்ளார்.