ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ்குமார், இவானா மற்றும் பலர் நடித்த 'நாச்சியார் படம், கடந்த 16ம் தேதி வெளிவந்தது. பெரிய அளவில் வெற்றியையும், வரவேற்பையும் பெறவில்லை என்றாலும் சுமாரான வெற்றியைப் பெற்றதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், பாலாவின் முந்தைய படங்களைப் போல இந்தப் படம் எந்த ஒரு பரபரப்பையும் ஏற்படுத்தவில்லை. மேலும், இந்தப் படம் சம்பந்தமாக பட வெளியீட்டிற்கு முன் எந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையும் பாலா நடத்தவில்லை. படத்தைப் பற்றி மீடியாக்களில் யாரும் பகிரவும் இல்லை. அதுவே, படத்தின் வரவேற்புக்கு எதிராக அமைந்துவிட்டது. படம் வெளிவந்த பின்னும் யாரும் அது பற்றி பெரிதாகப் பேசவில்லை. இருந்தாலும் படம் பத்து நாட்களில் பத்து கோடி வசூலித்ததாகச் சொல்லி வருகிறார்கள்.
இதனிடையே, படத்தின் வெற்றியை 'நாச்சியார்' சம்பந்தப்பட்ட படக்குழுவினர் அவர்களுக்குள்ளாகவே குடும்பமாகக் கொண்டாடியிருக்கிறார்கள். இயக்குனர் பாலா அவரது மனைவி, ஜோதிகா அவரது கணவர் சூர்யா, ஜி.வி.பிரகாஷ் அவரது மனைவி சைந்தவி என அவர்களே 'நாச்சியார்' வெற்றியை விருந்து வைத்து கொண்டாடிக் கொண்டுள்ளார்கள்.