தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் கமல்ஹாசன், பிப்., 21-ம் தேதி அரசியல் களத்தில் இறங்கினார். ராமநாதபுரம் மாவட்டத்தில் கமல் பயணம் ஆரம்பமானது. மதுரை மாநாட்டில் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அறிவித்தார். தனது கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என பெயர் வைத்திருக்கிறார். தொடர்ந்து அரசியல் தொடர்பான வேலைகளில் உள்ளார் கமல். இந்நிலையில் முதல் மாநாட்டிற்கு கமல் நன்றி தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் வெளியிட்ட அறிக்கை : பிப்.,21 அன்று மக்கள் நீதி மய்யத்தின் துவக்க விழா மதுரையில் நடந்தது. மிகுந்த எழுச்சியுடனும், கட்டுப்பாட்டுடனும் நடந்த பொதுக்கூட்டத்தை வெற்றி பெற செய்த எல்லாருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
முதல் நன்றியை மதுரை மக்களுக்கு காணிக்கையாக்குகிறோம். நற்பணி இயக்கத்தின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், விழாவில் பங்கேற்ற டில்லி முதல்வர் கெஜ்ரிவால், விவசாயிகள் சங்க தலைவர் பிஆர்பாண்டியன், டில்லி எம்எல்ஏ சோம்நாத் பாரதி, மாநாடுக்கு உதவிய போலீசார், தீயணைப்பு துறை, மின்சார துறை, பொது சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கும் நன்றி.
ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டு ஒத்துழைத்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி. விழா நிகழ்வுகளை உயிர்ப்புடனும் துல்லியமாக உலகெங்கும் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் கொண்டு சேர்த்த மீடியா, பத்திரிகை மற்றும் சமூக வலைதளங்கள் சார்ந்த, அனைத்து பெருமக்களுக்கும் இரு கரம் கூப்பி நன்றி சொல்கிறோம். மாநாட்டு நிகழ்வினை தொலைவில் இருந்து பார்த்துவிட்டு, வாழ்த்திய உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் நன்றி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.