‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சுமார் 8 வருடங்களுக்கு முன், அதாவது 2010-ல் பவன் கல்யான் ஜோடியாக 'புலி' என்ற படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நிகிஷா பட்டேல். அதன் பிறகு தமிழில் ஜெ.ஜெ.டிவி பாஸ்கரனுக்கு ஜோடியாக 'தலைவன்' என்ற படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்.
இந்த படத்தை தொடர்ந்து கௌதம் கார்த்திக் ஜோடியாக 'என்னமோ ஏதோ'படத்தில் நடித்தார் நிகிஷா பட்டேல்.தொடர்ந்து, 'கரையோரம்', 'நாரதன்', '7 நாட்கள்' ஆகிய படங்களில் நடித்தும் அவரால் தமிழில் க்ளிக்காக முடியவில்லை. இந்நிலையில் இப்போது தெலுங்கு படங்களில் நடிக்க மீண்டும் ஆர்வம் காட்டி வருகிறார் நிகிஷா பட்டேல். அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கும் தெலுங்குப் படத்தில் நிகிஷா பட்டேலுக்கு அதிரடி ஆக்ஷன் கலந்த கேரக்டர்.
இந்த கேரக்டரில் நடிக்க முதலில் இறுதிச்சுற்று ரித்திகா சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. என்ன காரணத்தினாலோ ரித்திகா நடிக்க மறுத்துவிட்டதால், நிகிஷா பட்டேலை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்தப்படத்தில் நடிப்பது குறித்து, ''நான் நிஜத்தில் ஒரு குத்துச்சண்டை வீராங்கனை. எனக்கு ஆக்ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை இருந்தது. அந்த ஆசை இந்த படம் மூலம் நிறைவேறியுள்ளது.” என்று கூறியுள்ள நிகிஷா பட்டேல், தொடர்ந்து இதுபோன்ற ஆக்ஷன் படங்களில் நடிக்க விரும்புகிறாராம்.