டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
வேலைக்காரனுக்கு முனபு வரை வேலைவெட்டி இல்லாமல் ஊரைச்சுற்றிக்கொண்டு திரியும் பையனாகத்தான் நடித்து வந்தார் சிவகார்த்திகேயன். எனக்கெல்லாம் கலெக்டர் வேடமா தருவார்கள். இந்தமாதிரி வேடம்தான் தருவார்கள் என்று அவரே மேடைகளில் சொல்வார். ஆனால், அடுத்த லெவலுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தபோது, டைரக்டர் மோகன்ராஜாவை சந்தித்து தனிஒருவன் போன்று எனக்கு ஒரு கதை பண்ணுங்கள் என்று கேட்டுக்கொண்டார் சிவகார்த்திகேயன்.
அதன்பிறகு உருவானதுதான் வேலைக்காரன். அந்த படத்தை அடுத்து தற்போது மீண்டும் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் பாணியில் பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன், அதைத் தொடர்ந்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். முதல் படத்தில் டைம்லைன் சம்பந்தப்பட்ட கதையை படமாக்கிய ரவிக்குமார், இந்த படத்தை ஒரு விஞ்ஞானி சம்பந்தப்பட்ட கதையில் படமாக்குகிறார். அதாவது வேற்று கிரகவாசிகளிடமிருந்து மனிதர்களை காப்பாற்றும் ஒரு விஞ்ஞானியின் கதையை படமாக்குகிறார்.
ஆக, எந்திரன் படத்தில் ரஜினி விஞ்ஞானியாக நடித்ததைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனும் விஞ்ஞானியாக தனது கெட்டப்பை மாற்றி நடிக்கப்போகிறார்.