பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இந்தியாவின் பொக்கிஷங்களில் ஒன்றான ராமாயணம் இதுவரை பல்வேறு திரைப்படங்களாக வெளிவந்துள்ளது. சமீபகாலமாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் ராமாயணத்தை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரமாண்ட திரைப்படமாக தயாரிக்க பலரும் முயற்சித்து வந்தனர். தற்போது அது கைகூடி வந்திருக்கிறது.
பிரபல தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், நமித் மல்கோத்ரா, மது மந்தீனா ஆகியோர் இணைந்து 500 கோடி ரூபாய் செலவில் ராமாயணத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளனர். ராமாயண கதை பெரும்பாலும் உத்தர பிரதேசத்தில் நடப்பதால் அதற்குரிய ஏற்பாடுகளை செய்து தருவதாக உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.
உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நேற்று நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. உத்தரபிரதேச தலைமைச் செயலாளர் அவினாஷ் குமாரும், தயாரிப்பாளர்களில் ஒருவரான மது மந்தீனாவும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
"ராமாயணம் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளில் தயாராகும். நவீன 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கப்படுகிறது. இது 3 பாகங்களாக வெளிவரும். நடிகர், நடிகைகள் தேர்வு விரைவில் நடக்க உள்ளது. இந்தியாவின் முக்கிய இயக்குனர் ஒருவர் இயக்க இருக்கிறார்" என்றார் தயாரிப்பாளர் மது மந்தீனா.
"உத்தரபிரதேச மாநிலத்தில் ராமாயணம் படப்பிடிப்பு நடத்த எல்லா விதமான உதவிகளையும் அரசு செய்யும்" என்றார் தலைமைச் செயலாளர் அவினாஷ்குமார்.