இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'நாச்சியார். பாலாவின் முந்தைய படங்களைப்போல் ரத்தவாடை அதிகமான அடிக்கவில்லை என்றாலும் இந்தப் படத்திலும் ரத்தம் இல்லாமல் இல்லை.
இந்நிலையில் நாச்சியார் படத்தை புரமோட் பண்ண நடிகர் சிவகுமார் பாராட்டு பத்திரம் வாசித்தார். 'நாச்சியார்' படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் பாலா, ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், இசை அமைப்பாளர் இளையராஜா, ஒளிப்பதிவாளர் ஈஸ்வர் முதலானோரை குறிப்பிட்டு பாராட்டினார் நடிகர் சிவகுமார்.
இப்போது நடிகர் கார்த்தியும் 'நாச்சியார்' படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்துள்ளார். 'நாச்சியார்' ரொம்பவும் 'நீட்'டான, விறுவிறுப்பான, அழுத்தமான கதையை கொண்ட படம் மட்டுமல்ல, நல்ல பெர்பார்மென்ஸ் வெளிப்பட்ட படம்! பாசிட்டிவான கேரக்டர்களை கொண்ட பாலாவின் இந்த படத்தில் அண்ணி (ஜோதிகா), ஜி.வி.பிரகாஷ் ஆகியோரின் கதாபாத்திரங்கள் அழுத்தமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது! பல நல்ல விஷயங்கள் உள்ள 'நாச்சியாரை' ரொம்பவும் ரசித்தேன்' என்று கார்த்தி பாராட்டியிருக்கிறார்.
அடுத்து சூர்யாவின் பாராட்டுக்கடிதம் வரலாம்.