தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கே.பாலசந்தரால் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜெயப்பிரதா. பின்னர் தெலுங்கு, ஹிந்தி என்று பிசியாகி விட்டார். அதோடு, கதாநாயகி வாய்ப்புகள் குறைந்த பிறகு அரசியலிலும் பிரவேசித்தவர், மீண்டும் சினிமாவுக்கு வந்தார். அந்த வகையில், நீண்ட இடைவேளைக்குப்பிறகு கமலுடன் தசாவதாரம் படத்தில் நடித்தார் ஜெயப்பிரதா.
இந்நிலையில், தற்போது பிப்ரவரி 23-ந்தேதி திரைக்கு வரு கேணி என்ற தமிழ் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் மலையாளத்தில் கிணர் என்ற பெயரில் வெளியாகிறது. இதைத் தொடர்ந்து தெலுங்கில் சரபா, ஸ்வர்ண சுந்தரி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் ஜெயப்பிரதா. இந்த படங்கள் கோடை விடுமுறையில் வெளியாகிறது. தொடர்ந்து வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ள ஜெயப்பிரதா, இளையதலைமுறை இயக்குனர்கள் தனக்கு வாய்ப்புத் தருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.