ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
படத்துக்கு படம் வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பது என்றால் மலையாள சினிமா படைப்பாளிகளின் சாய்ஸாக இருப்பது நடிகர் ஜெயசூர்யா தான், வாய்பேசாத, காதுகேளாத, திக்குவாய் குறையுடைய, ஒரு கால் ஊனமாக என இப்படி பல கேரக்டர்களில் கதைக்காக தன்னை மாற்றிக்கொண்டு நடித்தவர்தான் ஜெயசூர்யா.
அந்தவகையில் தற்போது தந்து ஆஸ்தான இயக்குனரான ரஞ்சித் சங்கரின் டைரக்சனில் 'ஞான் மேரிக்குட்டி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் ஆணாக இருந்து பெண்ணாக மாறும் கேரக்டரில் ஜெயசூர்யா நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.
அதுமட்டுமல்ல இந்தப்படத்தின் போஸ்டர் வடிவமைப்பில் சானிடரி நாப்கின் மீது டைட்டில் இடம்பெற்று இருப்பதால் இது சமீபத்தில் வெளியான அக்சய்குமார் நடித்த 'பேடுமேன்' படத்தின் ரீமேக்கா எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.
ஆனால் இதை மறுத்துள்ள இயக்குனர் ரஞ்சித் சங்கர், இது முற்றிலும் வேறான கதை என்றும், இதில் புதிய ஜெயசூர்யாவை பார்ப்பீர்கள் என்றும் கூறியுள்ளார்.