தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாளத்தில் பிரபலமான இயக்குநர் ஜீத்து ஜோசப். மோகன்லால் நடிப்பில் இவரது இயக்கத்தில் வெளிவந்த த்ரிஷ்யம் படம், தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் ரீ-மேக்காகி வெற்றி பெற்றது. ஜீத்து பாலிவுட்டில் ஒருபடம் இயக்க உள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் தற்போது அது உறுதியாகி உள்ளது.
ஜீத்து ஜோசப் இயக்கும் முதல் பாலிவுட் படத்தில் இம்ரான் ஹாஸ்மியும், ரிஷி கபூரும் முக்கிய ரோலில் நடிக்க உள்ளனர். கிரைம் கலந்த திரில்லர் கதையாக இப்படம் உருவாக உள்ளது. தற்போது திரைக்கதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மற்ற நடிகர்கள் தேர்வும் நடக்கிறது. அனைத்தும் முடிவானதும் படத்தை ஆரம்பிக்க உள்ளனர்.