தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் பிரபலமானவர் நடிகை ஓவியா. தற்போது லாரன்சின் காஞ்சனா-3, விமலுடன் களவாணி-2 மற்றும் 90எம்எல் உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். இதில் குளிர் படத்தை இயக்கிய அனிதா உதிப் இயக்கும் 90எம்எல் படத்தில் ஓவியாதான் பிரதான வேடத்தில் நடிக்கிறார். அதோடு, சிம்பு அந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
ஏற்கனவே மரணமட்டை என்ற நியூ இயர் ஆல்பத்தில் சிம்பு, ஓவியா இருவரும் இணைந்து பாடி சர்ச்சைகளை சந்தித்தனர். இருப்பினும் அதையடுத்து இப்போது ஓவியாவின் இந்த படத்திற்கு சிம்புவே இசையமைக்கிறார். கூடவே இந்த படத்திலும் அவர்கள் இருவரும் ஒரு பாடல் பாடி பரபரப்பை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஓவியா தனது சம்பளத்தை தடாலடியாக உயர்த்தி விட்டதாக வெளியாகி வந்த செய்திகள் குறித்து ஓவியா கூறும்போது, பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு யாரோ என்னைப்பற்றி தவறான செய்திகளை திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். ஆனால், நான் எந்த தயாரிப்பாளரிடமும் இவ்வளவு சம்பளம் கொடுத்தால்தான் நடிப்பேன் என்று சொன்னதே இல்லை.
அதோடு, களவாணி-2 படத்தில் நடிக்கக்கூட நான் அதிக சம்பளம் கேட்டதால் வேறு நடிகையை புக் பண்ணி விட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் இப்போது நான்தான் அந்த படத்தில் நடிக்கிறேன். இந்த மாதிரி உண்மைக்கு புறம்பான செய்திகள் நிறைய வெளியாகி வருகிறது என்று கூறும் ஓவியா, என்னைப் பொறுத்தவரை நல்ல கதைகளைத் தான் எதிர்பார்க்கிறேன். அதோடு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே உள்ளது என்கிறார்.