‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
அர்ஜூன் ரெட்டி தெலுங்குப்படத்தில் நடித்து பிரபலமானவர் ஷாலினி பாண்டே. அதன்பிறகு தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் மகாநதி படத்தில் நடிப்பவர், தமிழில், ஜி.வி.பிரகாசுடன் 100 % லவ், ஜீவாவுடன் கொரில்லா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கில் மேலும் சில படங்களில் நடிக்கவும் கையெழுத்திட்டுள்ளார்.
இதுபற்றி ஷாலினி பாண்டே கூறுகையில், அர்ஜூன் ரெட்டி என்ற படத்தில் நான் நடித்த பிரீத்தி கேரக்டர் என்னை பெருவாரியான மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விட்டது. நான் எங்கு சென்றாலும் பிரீத்தி என்றுதான் மக்கள் அழைக்கிறார்கள். அதைக் கேட்டு நான் உணர்ச்சி வசப்படுகிறேன். மக்களின் அன்புக்கு பாத்திரமாகிவிட்டேன்.
என்றாலும், அந்த படத்தின் மூலம் கிடைத்த வெற்றி, புகழை என் தலையில் ஏற்றிக்கொள்ளவில்லை. நான் எப்போதும் போலவே கேசுவலாக இருக்கிறேன். அப்படி தெலுங்கு ரசிகர்களை கவர்ந்தது போன்று தமிழில் நடித்து வரும் படங்கள் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களின் மனதிலும் இடம் பிடிக்க வேண்டும் என்பதே எனது இப்போதைய நோக்கமாக உள்ளது என்கிறார் ஷாலினி பாண்டே.