ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
காற்று வெளியிடை படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கும் 'செக்கச் சிவந்த வானம்' படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை சில வெளிநாடுகளிலும் படமாக்க திட்டமிட்டிருக்கிறார் மணிரத்னம்.
உள்நாடு, வெளிநாடு என பல்வேறு இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றாலும் மொத்தப் படப்பிடிப்பையும் 55 நாட்களில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளாராம். அதாவது மே மாதத்துக்குள் படப்பிடிப்பு முடிவடையுமாம். திட்டமிட்டபடி செக்கச் சிவந்த வானம் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டால் படத்தை ஜூலை மாதம் ரிலீஸ் செய்யவும் மணிரத்னம் திட்டமிட்டுள்ளார்.
பொதுவாகவே திட்டமிட்டபடி குறுகியகாலத்தில் படப்பிடிப்பு நடத்துகிறவர் மணிரத்னம். 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், மன்சூரலிகான், ஜெயசுதா, தியாகராஜன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்தாலும் தன்னுடைய பாணியில் குறுகிய காலத்தில் படத்தை எடுத்து முடிக்க திட்டமிட்டிருக்கிறார்.