தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரகுமான் நடித்த 'துருவங்கள் பதினாறு' படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் 'நரகாசூரன்'. இப்படத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித், ஸ்ரேயா, ஆத்மிகா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். துருவங்கள் பதினாறு படத்தின் வெற்றியினால் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் நரகாசூரன் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.
இந்தநிலையில் இந்த படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நரகாசூரன் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கவில்லை என்றும், வில்லன் போன்றதொரு நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டுமல்ல சந்தீப்கிஷன் ஏற்றுள்ள கதாபாத்திரம் வழக்கமான வில்லன் கேரக்டர் இல்லையாம்.
இது ஒருபக்கம் இருக்க, இந்த படத்தின் ரீ-ரெக்கார்டிங் வேலைகள் மாசிடோனியா (Macedonia) என்ற நாட்டில் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் படம் வெற்றியடைந்ததால் தன்னுடைய நடவடிக்கை தொடங்கி, பிலிம் மேக்கிங் வரை எல்லாவற்றிலும் ஹை பையாக இருக்கிறார் கார்த்திக் நரேன்.