பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இயக்குனர்கள் மிஷ்கின், ராம், இருவரும் ஹீரோவாக நடிக்க, பூர்ணா கதாநாயகியாக நடித்த படம் சவரக்கத்தி. சென்ற வாரம் வெளியான 'சவரகத்தி' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அது மட்டுமல்ல, பத்திரிகையாளர்கள் மத்தியிலும் பாராட்டுக்களும், பாசிட்டிவ்வான விமர்சனங்களும் கிடைத்ததில் மகிழ்ந்துபோன மிஷ்கின், அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 'சவரகத்தி' படக்குழுவினருடன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசும்போது மிஷ்கின் முக்கியமான விஷயம் ஒன்றை சொன்னார்.., “இந்த படத்தில் சிறந்த நடிப்பை வழங்கிய பூர்ணாவுக்காக நான் இன்னும் கதைகளை எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். வாழ்நாள் முழுவதும் நான் அவருக்கு ஒரு நண்பனாக, சகோதரனாக, சிறிய தந்தையாக இருந்து பாதுகாப்பேன்.” என்று சொன்னார். மிஷ்கின் இப்படி சொன்னதும் பூர்ணா அழுதேவிட்டார்.