தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
லைகா நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரியாக இருந்தவர் ராஜூ மகாலிங்கம். இவர், ரஜினியின் தீவிர ரசிகரும் கூட. ரஜினி அரசியல் பயணத்தை அறிவித்ததை தொடர்ந்து, தான் பதவி வகித்த லைகா நிறுவனத்தில், தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ரஜினியின் கட்சியில் இணைந்தார்.
இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில செயலாளராக ராஜூ மகாலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இதுநாள் வரை ரஜினி மக்கள் மன்றம் தொடர்பான அறிக்கை வெளியாகும்போது, அதில் நிர்வாகி சுதாகரின் பெயர் மட்டும் இடம்பெற்றிருக்கும். இப்போது தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்றத்திற்கான நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், நிர்வாகி சுதாகரின் பெயரோடு, ராஜூ மகாலிங்கம் பெயரும் இடம் பெற்றுள்ளது. அதில், அவருக்கு செயலாளர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஒன்றியத்துக்கான நிர்வாகிகள் விபரம்...
செயலாளர் : பி.மேகலா
இணைச்செயலாளர் : பழனி மகராஜன், செல்வம் கிறிஸ்டோபர், ஜாக்சன், எல்மோ
செயற்குழு உறுப்பினர்கள் : உலகநாதன், வடிவேல், சேக் முகமது, ஸ்டான்லி