'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ராமின் உதவியாளர் மாரி செல்வராஜ். அவர் தற்போது இயக்கி உள்ள படம் பரியேறும் பெருமாள். இதனை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரித்துள்ளது. பா.ரஞ்சித் தயாரிக்கும் முதல் படம் இது. கதிர், ஆனந்தி நடித்துள்ளனர், சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தனது சீடன் இயக்கி உள்ள படத்தை வாழ்த்தி ராம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
2006ல் கற்றது தமிழ் அலுவலகத்தில் ஒரு நல் இரவில் செல்வம் எங்கள் வாழ்க்கையில் வந்து சேர்ந்தான். என் அகம் புறம் என எல்லாம் தெரிந்த என் தோழமை அவன். என் முதல் மகன் அவன். அவனுடய 12 வருட உழைப்பின் பொறுமையின் முதல் விளைச்சல் “பரியேறும் பெருமாள்”. மாபெரும் சபைகளில் உனக்கு மாலைகள் விழ வேண்டும் செல்வம். விழும்.
அட்டக்கத்தி தமிழ் திரையுலகம் கண்டிராத மனிதர்களை, வெளியே முதன் முதலில் காட்சிப் படுத்திய படம். திரை மொழியில் தனக்கென ஒரு விதத்தை உருவாக்கிக் கொண்ட படம். பா.ரஞ்சித்தை அறிமுகப்படுத்திய படம். அட்டகத்தியின் வெற்றியே இன்று நீலம் என்ற தயாரிப்பு நிறுவனமாய், சக படைப்பாளியை அங்கீகரிப்பதும், அவர்களுக்கு தன்னுடைய வெற்றியை இடத்தை பங்கு கொடுப்பதும் பண்பட்ட படைப்பாளிகளால் மட்டுமே முடியும். அப்படியாப்பட்ட ஒரு கலைஞன் பா.ரஞ்சித்.
பா.ரஞ்சித்தின் நீலம் நிறுவனத்தின் முதல் திரைப்படத் தயாரிப்பு மாரி செல்வராஜ்ஜின் பரியேறும் பெருமாள். வாழ்த்துக்கள்.
இவ்வாறு ராம் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்திருக்கிறார்.