இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
விக்ரம் ஜோடியாக, ஸ்கெட்ச் படத்தில் நடித்த தமன்னா, தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என, முன்று மொழிகளிலும், 'பிசி'யாக நடித்து வருகிறார். அதே போல், ஆன்மிகத்திலும் மூழ்கியுள்ளார்.
நேற்று முன்தினம், ஈஷா யோகா மையம் சார்பில் நடத்தப்பட்ட, மகா சிவராத்திரி பூஜையில், தமன்னா பங்கேற்றார்.
அவர் கூறியதாவது: வெற்றி, தோல்வி சகஜம். ஆனால், அதற்கு யார் பொறுப்பு ஏற்பது என்பது முக்கியம். படங்கள் தோல்வி அடைந்தால், அதற்கு நாம் பொறுப்பு ஏற்பது, தன்னம்பிக்கையை இழக்க செய்யும்.
தோல்வியில், பாடம் கற்க வேண்டும்; வெற்றியில், பெருமைப்பட வேண்டும். இப்போது எனக்கு, நேர்மறை சிந்தனைகளே உருவாகின்றன. எதிர்மறை சிந்தனைகளை, யோசிப்பதில்லை. இதனால் என்னையே, நான் காதலிக்க துவங்கியுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.