இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
விஜய் தற்போது தனது 62வது படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார், ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். .
இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னை அருகே உள்ள முட்டுக்காடு பகுதியில் உள்ள கடற்கரையில் செட்போட்டு நடந்து வருகிறது. கடைவீதி போன்று போடப்பட்ட செட்டில் இரண்டு வாலிபர்கள் ஒரு பெண்ணின் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடுவது போலவும், விஜய், அவர்களை தடுத்து நிறுத்தி பைக் ஓட்டகிறவனை அலேக்காக தூக்கி தரையில் அடிப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது.
இந்த காட்சியை சுற்றி படப்பிடிப்பு குழுவினர் நிற்கிறார்கள். படப்பிடிப்பில் செல்போனை பயன்படுத்தக்கூடாது என்ற கடுமையான விதிமுறை இருந்தும் யாரோ பின்னால் நின்று இந்த காட்சியை செல்போனில் படம்பிடித்து இணைய தளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு காலா படத்தின் காட்சிகள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.