டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இலங்கையில் உள்நாட்டு போர் தொடங்குவதற்கு முன்பு அங்கு தமிழ் படங்கள் தயாரிக்கப்பட்டு வந்தது. பைலட் பிரேம்நாத், போன்ற சில படங்கள் இலங்கை இந்தியா கூட்டுத் தயாரிப்பாகவும் வெளிவந்தது. ஆனால் கடந்த 40 ஆண்டுகளாக முறையான பொழுதுபோக்கு படங்கள் தயாரிக்கப்படவில்லை. தற்போது கோமாளி கிங்ஸ் என்ற படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பிக்சர்ஸ் திஸ் புரொடெக்சன்ஸ் தயாரிப்பில் முழுக்க, முழுக்க இலங்கையில் வாழும் தமிழ்க் கலைஞர்களின் கூட்டணியில் உருவாகியிருக்கிறது. கிங் ரட்ணம் இயக்கியிருக்கிறார். இவர் இலங்கையின் மூத்த தமிழ்த் திரைப்பட கலைஞரான எம்.எஸ்.இரத்தினத்தின் பேரன். இந்தப் படத்தில் இயக்குநர் கிங் ரட்ணமே மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.
சத்யப்பிரியா ரத்தினசாமி, மீனா தெய்வநாயகம், எனூச் அக்சய், ராஜ கணேசன், கமலஸ்ரீ மோகன், நிரஞ்சனி சண்முகராஜா மற்றும் பல இலங்கை, தமிழ் கலைஞர்களும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக மகிந்த அபேசிங்காவும், இசையமைப்பாளராக ஸ்ரீராம் சச்சியும் பணியாற்றி உள்ளனர்.
"லண்டனிலிருந்து உறவினரின் திருமணத்திற்காக தாயகம் திரும்பும் பத்மநாதன் குடும்பத்தாருக்கு இலங்கையில் ஏற்படும் எதிர்பாராத சில சம்பவங்களும், அதையொட்டி நடக்கும் விஷயங்களும் தான் படத்தின் திரைக்கதை. விரைவில் இலங்கை முழுவதும் திரையிடப்பட இருக்கிறது. இந்தியாவிலும் குறிப்பாக நம் தமிழகத்திலும் படத்தை வெளியிடுவதற்கான முயற்சில் ஈடுபட்டிருக்கிறோம்" என்கிறார் இயக்குநர் கிங் ரட்ணம்.