‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தமிழ் சினிமாவில் நம்பர் 1 நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம், நாயகனாக நடிக்க ஆசைப்பட்டு அவருக்கிருந்த வெற்றியையும், புகழையும், பெயரையும் குறைத்துக் கொண்டதுதான் மிச்சம். சிவகார்த்திகேயன் ஹீரோவாக வெற்றி பெறும் போது நீங்கள் வெற்றி பெற முடியாதா என சிலர் கொம்பு சீவி விட்டதன் விளைவாக சந்தானம் சொந்தப் படங்களைத் தயாரித்து சிலபல கோடிகளை இழந்ததுதான் மிச்சம்.
அவர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'சக்க போடு போடு ராஜா' படமும் தோல்வியைத் தழுவியது. அவர் நாயகனாக நடிக்க ஆரம்பித்து வெளிவந்த படங்களில் 'தில்லுக்கு துட்டு' படம் மட்டுமே வியாபார ரீதியாக வெற்றி பெற்றது. சந்தானம் நடித்து எப்போதே முடிவடைந்த 'சர்வர் சுந்தரம்' படம் இன்னும் வெளிவராமல் திணறிக் கொண்டிருக்கிறது. அவர் நாயகனாக நடித்து வரும் மற்ற படங்களான 'ஓடி ஓடி உழைக்கணும், மன்னவன் வந்தானடி' ஆகிய படங்களை நினைக்கும் போது படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே, தன்னுடைய தோல்வியை மாற்றியே ஆக வேண்டும் என 'தில்லுக்கு துட்டு' இயக்குனர் ராம்பாலா உடன் சந்தானம் மீண்டும் கைகோர்க்க உள்ளாராம். 'லொள்ளு சபா' மூலம் சந்தானத்தை உலகறிய வைத்தவர் ராம்பாலாதான். திரையுலகிலும் சந்தானத்திற்கு வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்தவர் அவர்தான். அதனால், அவரை உடனடியாக ஒரு கதையை உருவாக்கச் சொல்லி இருக்கிறாராம். அனேகமாக அது 'தில்லுக்கு துட்டு' படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்கிறார்கள்.