'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
எந்த அளவுக்கு பாராட்டும் புகழும் கிடைக்குமோ அந்த அளவுக்கு ஏதோ ஒரு வடிவத்தில் பிரச்னையும் தேடிவரும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் தான் புருவ நாயகி பிரியா வாரியரும், அவர் நடித்துள்ள ஒரு ஆதார் லவ் படத்தின் மாணிக்ய மலாராய பூவி பாடலும். கடந்த சில தினங்களாக அதிகம் ரசிக்கப்பட்டு வரும் பெண்ணாக மாறியுள்ளார் பிரியா வாரியர்.
இந்தநிலையில், இந்தப்பாடல் வரும் ஒரு வரி தங்களது மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக கூறி ஐதராபாத்தை சேர்ந்த முஸ்லீம் இளைஞர் அமைப்பினர் சிலர் புகார் அளித்துள்ளனர். இந்தப் பாடலில் நடித்த பிரியா வாரியர் மற்றும் பாடலை எழுதி, இசையமைத்து, பாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஓமர் லுலு கூறும்போது, “எந்த மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் இந்தப்பாடல் உருவாகவில்லை. அனைவரும் ரசிக்கும்படியான ஒரு பாடலாகவே இது உருவாகியுள்ளது. அப்படியும் தேவையில்லாத சர்ச்சைகள், பிரச்சனைகள் வந்தால் இந்தப்பாடல் இடம்பெறாமலேயே படத்தை ரிலீஸ் செய்வோம்” என கூறியுள்ளார்.