டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ப.பாண்டி படத்தை அடுத்து தனுஷ் இயக்கி, நடிக்கும் படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. சுதந்திர போராட்ட காலத்து கதையில் உருவாகும் இந்த படம் தமிழ், தெலுங்கில் உருவாக இருக்கிறது. இதனால், முன்னணி தெலுங்கு நடிகர்களான சிரஞ்சீவி, நாகார்ஜூனா ஆகிய இருவரில் ஒருவரை இந்த படத்தில் நடிக்க வைக்க அவர் முயற்சி எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், தற்போது தான் இயக்கும் புதிய படத்தில் ஒரு லீடு ரோலில் நடிக்க கன்னட நடிகர் சுதீப் தற்போது ஒப்பந்தம் செய்துள்ளார் தனுஷ். சமீபத்தில் பெங்களூர் சென்று சுதீப்பை சந்தித்த தனுஷ், அவரிடம் கதையை சொல்லி ஓகே செய்து விட்டாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக உள்ளது.
தனுஷின் ப.பாண்டி படத்தை கன்னடத்தில் சுதீப் தான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.