துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர். இயக்குனர் பாலசந்தரின் இரண்டு அலுவலகங்கள் ஏலத்திற்கு வந்துள்ளதாக கடனைக் கொடுத்த வங்கி நாளிதழ்களில் ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் ஆளுமை இயக்குநராக இருந்த பாலசந்தர் குடும்பத்திற்கு இப்படி ஒரு நிலையா என பலரும் கவலை தெரிவித்ததோடு, பாலசந்தரின் குடும்பத்தாருக்கு போனில் இதுப்பற்றி விசாரித்துள்ளனர். இந்நிலையில் பாலசந்தரின் கவிதாலயா சார்பில் மகள் புஷ்பா கந்தசாமி இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு...
கவிதாலயா டிவி.தொடர் தயாரிப்புக்காக அரசுடமை வங்கி ஒன்றில் 2010-ல் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான வேறு சொத்துக்களை அடமானம் வைத்து கடன் வாங்கியது. 2015-ல் திரைப்பட மற்றும் டிவி தொடர் தயாரிப்புகளை நிறுத்தி டிஜிட்டல் தயாரிப்புகளை மேற்கொள்ள முடிவு செய்தது. முதலும், வட்டியும் சேர்த்து கணிசமான தொகையையும் செலுத்தி விட்டது. மீதமுள்ள கடன் பாக்கியை செலுத்துவதற்கு வங்கியுடன் ஒரே தவணையில் செலுத்த சட்டரீதியாக பேசி வருகிறோம்.
இந்த சமயத்தில் வங்கியின் விளம்பரத்தை பார்த்து பாலசந்தரின் வீடும், அலுவலகமும் ஏலத்துக்கு வந்துவிட்டதாக செய்தி பரவிட்டது. இதனால் யாரும் கலக்கம் அடைய வேண்டாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.