பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வன்முறை தூண்டும் விதத்தில் பேசிய பாராதிராஜா மீது முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யலாம் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
படவிழா ஒன்றில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, வைரமுத்துவிற்கு தலைகுனிவு ஏற்படும் வகையில் ஏதாவது நடந்தால் பிறர் தலையை எடுக்கவும் தயங்க மாட்டோம் என வன்முறையை தூண்டும் விதமாக பேசினார். மேலும் கடவுள் விநாயகரை இறக்குமதி கடவுள் என்றும் குறிப்பிட்டார். இதுதொடர்பாக இந்து மக்கள் முன்னணி அமைப்பின் சார்பில் நாராயணன் என்பவர் பாரதிராஜா மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இருபிரிவினர் இடையே மோதலை தூண்டும் விதத்தில் பேசிய பாரதிராஜா மீது முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யலாம் என கோர்ட் உத்தரவிட்டது.