ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திரு இயக்கத்தில் கார்த்திக்கும் அவரது மகன் கௌதம் கார்த்திக்கும் இணைந்து மிஸ்டர். சந்திரமௌலி என்ற படத்தில் நடித்து வருகின்றனர். ஜி. தனஞ்ஜெயன் தயாரிக்கும் இந்தப்படம் ஏப்ரல் 27 அன்று வெளியிடப்பட இருப்பதாக சில வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2.0 படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகள் திட்டமிட்டபடி முடியாததினால், அதே ஏப்ரல் மாதத்தில் ரஜினி நடிக்கும் காலாவை வெளியிட திட்டமிட்டனர்.
இது குறித்து கடந்த வாரம் ஊடங்களில் பரபரப்பான செய்திகள் அடிப்பட்டன. தற்போது அந்த செய்தி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2.0 வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த ஏப்ரல் 27ஆம் தேதி அன்று பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் 'காலா' ரிலீஸாகவிருப்பதாக தயாரிப்பாளர் தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
காலா படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. காலா குறுக்கே வந்ததால் ஏப்ரல் 27 அன்று வெளியிடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த மிஸ்டர். சந்திரமௌலி படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.