பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வருகிற மார்ச் 1ந் தேதி முதல் புதிய திரைப்படங்கள் திரையிடப்படாது என்று தயாரிப்பாளர் சங்கம் ஸ்டிரைக் அறிவித்துள்ளது. இதனால் தியேட்டர்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசிக்க தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களின் அவரக்கூட்டம் வருகிற 17ந் தேதி திருச்சியில் நடக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தனது உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
நமது திரையரங்குகளின் தற்போதைய நிலை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. அதுவும் கடந்த 3 மாதங்களாக வசூல் மிக மோசமாகி நம் திரையரங்கு தொழில் முடங்கும் ஆபத்தில் உள்ளது. மற்ற அமைப்பினரின் நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டியதுள்ளது, மத்திய, மாநில அரசுகளிடம் நம் தொழில் பிரச்சினைகளை எடுத்துச் செல்ல வேண்டியது உள்ளது. பிற துறையினரால் ஏற்படும் சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
அதனால் நாம் அனைவரும் ஒன்று கூறி தற்போதைய நிலை குறித்து ஆராய்ந்து நல்லதொரு மாற்றம் காண வேண்டிய நிலையில் இருக்கிறோம். அதனால் வருகிற 17ந் தேதி திருச்சி மாயாஸ் ஓட்டலில் நடக்கும் சிறப்பு அவசரக்கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.