இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
தமிழ்த் திரையுலகத்தில் 20 வருடங்களுக்கு முன்பு இயக்குனராக அறிமுகமானவர்களில் இன்னமும் தொடர்ந்து படங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரே இயக்குனர் சுந்தர் .சி மட்டுமே. எப்படி இத்தனை வருடங்களாக உங்களால் மட்டும் படங்களைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்க முடிகிறது என்று ஒரு முறை அவரிடம் கேட்ட போது, 'காலத்திற்கேற்றபடி நம்மை 'அப்டேட்' செய்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். அந்த 'அப்டேட்' என்ன என்பது அவருடைய படங்களைப் பார்த்தாலே தெரியும்.
இசையமைப்பாளர், நடிகர்கள் என அந்தந்த காலகட்டத்தில் யார் டிரென்டிங்கில் இருக்கிறார்களோ அவர்களை வைத்தே படங்களை இயக்குவார். கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம், சூரி, சதீஷ், ரோபோ சங்கர் என நகைச்சுவை நடிகர்களைப் பார்த்தாலே அதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
'கலகலப்பு 2' படம் பற்றி இருவிதமான விமர்சனங்கள் வந்தாலும் பொழுது போக்கு படமாக இருப்பதாக தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். இந்தப் படத்தை விளம்பர செலவு உட்பட சுமார் 8 கோடிக்குள் முடித்துக் கொடுத்துவிட்டாராம் இயக்குனர் சுந்தர் .சி. அதில் அவருடைய சம்பளம் 10 கோடியைச் சேர்க்கவில்லை என்கிறார்கள். படத்தின் தமிழ்நாட்டு உரிமை, சாட்டிலைட் உரிமை ஆகிய இரண்டும் சேர்ந்து 15 கோடி வரை விற்கப்பட்டுள்ளது.